புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டுவிட்டரில் பதிவிட்டதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக, 1098 என்ற அவசர சிறப்பு உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது, 18,200 அழைப்புகள் இதன்வழியே வந்துள்ளன. இதன் மூலம் 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.